
வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் பப்ளிட்டி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் குளத்தில் விழுந்து ஒரு மான் தத்தளித்தது.
இதனைப் பார்த்த யானை மெதுவாக தும்பிக்கையை பயன்படுத்தி பல முயற்சிகள் செய்து இறுதியாக மானை காப்பாற்றியது. கரைக்கு வந்ததும் அந்தமான் தனது கூட்டத்தை நோக்கி ஓடியது. அமைதியாக யானையும் திரும்பி சென்றது.
View this post on Instagram
மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். விலங்குகள் எவ்வளவு புத்திசாலி என்பதை அனைவரும் புரிந்துகொண்டு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் விலங்குகளுக்கு இரக்கம் தெரியும் இதுதான் உண்மையான சக்தி என பதிவிட்டுள்ளார்.