
மத்தியப்பிரதேசம், பண்ணா மாவட்டத்தில் உள்ள பகாடி கேதா சாலையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பலர் பஸ்ஸின் கூரையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பொறுப்பு வகிக்க வேண்டிய போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்தான் இத்தகைய பிரச்னைகள் தொடர்ந்து நிகழ்கின்றன.
#WATCH | #MadhyaPradesh: Passengers Caught Travelling On Bus Roof In Panna#MPNews #Panna pic.twitter.com/IyzrshcTlt
— Free Press Madhya Pradesh (@FreePressMP) June 7, 2025
வாகன விதிமுறைகளையும், போக்குவரத்து ஒழுங்குகளையும் முழுமையாக மீறி, இந்த பயணிகள் கூரையில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்து காவல் நிலைய பொறுப்பாளர்கள் கூறியதாவது, “பஸ்ஸின் மேல் பயணித்தவர்களும், அந்த பஸ்ஸை இயக்கியவரும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர். மேலும், முக்கிய சாலைகளில் கண்காணிப்பு வலுவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.