
பாம்புகளைக் காணும்போது மக்கள் பெரும்பாலும் பயந்து தவிக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் ‘அரியானா’ என்ற சிறுமி பல பந்து மலைப்பாம்புகளை சூட்கேஸில் வைத்துக்கொண்டு பயணம் செய்கிறார். அவை உயிருள்ள பாம்புகள் என்பதையும், அவை அவளுடன் மிகவும் பழகியிருப்பதையும் வீடியோ தெளிவாக காட்டுகிறது.
அரியானா, அந்த பாம்புகளை தனது குடும்பத்தினர்போலவே நேசிக்கிறார். அவளுடன் அவை படுக்கையில் தூங்குகின்றன, அவளுடன் விளையாடுகின்றன. இந்த வீடியோவுடன், “இது ஒரு குறுகிய பயணமாக இருந்தாலும் சரி, நீண்ட பயணமாக இருந்தாலும் சரி, என் பாம்புகள் நன்றாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறேன்” என அரியானா பதிவு செய்துள்ளார். அவரது செயல்கள் பாம்புகள் பற்றிய பாரம்பரியமான பயத்தை மாற்றுகின்றன.
View this post on Instagram
அரியானா மேலும் கூறுகையில், பந்துபோன்ற மலைப்பாம்புகள் பாதுகாப்பானவையாகவும், நன்றாக பராமரிக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருப்பதாக விளக்குகிறார். அவற்றுக்கு சரியான வெப்பநிலை, காற்றோட்டம் மற்றும் அமைதியான சூழ்நிலை வழங்கப்பட வேண்டும் எனவும், அவற்றை வளர்ப்பதற்கு பாசமும் பொறுப்பும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து, பலர் பாம்புகள் குறித்து தங்கள் பார்வையை மாற்றத் தொடங்கியுள்ளனர்.