இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது தமிழகத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல. ஆனால் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது நல்லது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மக்கள் பயப்பட தேவையில்லை. வீரியம் குறைவான கொரோனா தான் பரவுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று கூறினார்.