
சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில், கைப்பந்து விளையாடும் பெண்கள் சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மகாதேவ் காட்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு பிறகு, நள்ளிரவில் பெண்கள் வீடு திரும்பும் வழியில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
छत्तीसगढ़ | रायपुर में बर्थडे से लौट रहीं लड़कियों पर बदमाशों ने किया हमला, सोशल मीडिया पर वायरल हो रहा वीडियो#Chhattisgarh #Raipur #ViralVideo #Fighting pic.twitter.com/VhYvUpbc90
— Vistaar News (@VistaarNews) June 5, 2025
மர்ம நபர்கள் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டு, அவர்களை வழிமறித்து தாக்கியதுடன், அவர்களில் ஒருவரின் விரலையும் துண்டித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் முகத்தில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக டிடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில், குற்றவாளிகள் பெண்களை துன்புறுத்தும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற பெண்கள் இப்படி ஒரு பயங்கர தாக்குதலில் சிக்கியது, சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்புகிறது.