
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தேசிய பொது விடுமுறை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளிகள் அரசு அலுவலகங்கள் வங்கிகள் செயல்படாது என்ற இணையதள செய்தி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
இணையத்தில் பரவி வரும் அந்த செய்தி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் வெள்ளிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்றுதான் அறிவித்துள்ளது.