
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்கு கள்ளிகுளம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் லாரி ஓட்டி வந்தார். அவரை விசாரித்த போது அவர் ஏர்வாடி என்.எஸ். புரத்தை சேர்ந்த முகேஷ்(29) என்பது தெரியவந்தது.
அவர் ஓட்டி வந்த லாரியை போலீசார் சோதனை செய்தபோது அதில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் எம்சாண்ட் மணலை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனால் சட்ட விரோதமாக மணல் அள்ளிய முகேஷை போலீசார் கைது செய்தனர்.
பின்பு கைது செய்த முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணல் அள்ளுவதற்காக முகேஷ் உபயோகித்த லாரி மற்றும் சட்டவிரோதமாக அள்ளிய மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.