லக்னோவில் உள்ள மதேகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஷியா பிஜி கல்லூரிக்கு முன்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு பயங்கர சாலை விபத்து நடந்தது. அதாவது வேகமாக வந்த மாருதி பிரெஸ்ஸா கார், சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது.

அந்த விபத்தில் சிக்கிய வீரேந்திர பாண்டே(45) என்றவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 10 வயது சிறுவன்  தக்ஷ் சோன்கர் மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்துக்குப் பிறகு, அங்கு பெரிய குழப்பம் ஏற்பட்டது. அங்கு நின்ற பொதுமக்கள் கூறுகையில், காரை ஓட்டியவர் ஒரு பெண் என்பதும், அவர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் காரை ஓட்டியதாகவும் தெரிகிறது.

அதனால் ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், கார் நடைபாதையில் மோதியது. பின்னர் அது ஒரு மின்கம்பத்திலும் மோதியது. காயமடைந்தவர்கள் உடனடியாக பால்ராம்பூர் மருத்துவமனை சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, உள்ளூர் மக்கள் அந்த பெண் ஓட்டுநரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் வேகமாக  சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கினர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய கார் பங்கஜ் குமார் குப்தா என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண் ஓட்டுநர் தனு குப்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.