உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோத்வாலி மைந்தர் பகுதியில் சாய்ரா என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணை ரஃபி என்ற வாலிபர் காதலித்து வந்த நிலையில் தன் காதலை சாய்ரா திடீரென காதலை ஏற்க மறுத்துவிட்டார்.

அதாவது கடந்த 2 வருடங்களாக ரஃபி மற்றும் இளம் பெண் இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென இளம் பெண் அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். செல்போனில் பேசுவதை நிறுத்தியதால் ரஃபி காட்டு பகுதிக்கு அந்த இளம் பெண்ணை தனியாக பேசுவதற்காக அழைத்தார்.

அந்த பெண்ணும் அங்கு சென்ற நிலையில் இருவருக்குள்ளும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின் போது கோபத்தில் இளம்பெண் வாலிபரை கன்னத்தில் அறைந்ததால் ஆத்திரத்தில் அவர் ஒரு ஸ்க்ரூவை வைத்து அந்தப் பெண்ணை குத்தி கொலை செய்தார்.

அந்தரங்க உறுப்பு உட்பட உடம்பின் 35 இடங்களில் அவர் ஸ்குருவால் குத்தியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.