மனிதர்கள் தான் உலகின் புத்திசாலி உயிரினம் என நம்பப்படுகின்றனர். ஆனால் பெற்றோராக செயல்படுவதில் சிம்பான்சிகள் கூட சில நேரங்களில் மனிதர்களை விட சிறந்த பங்காற்றுகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ. ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள சிம்பான்சிகள் குழுவில், ஒரு இளைய சிம்பான்சி பார்வையாளர்களுக்கு கற்கள் எறிந்து அதிருப்தியை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில், பின்னால் இருந்த ஒரு வயது முதிர்ந்த சிம்பான்சி – அதற்கு அம்மா என்றே சந்தேகிக்கப்படுகிறது, கையில் ஒரு கிளையுடன் முன் வந்து அந்தச் சிறுவன் சிம்பான்சியை அடித்தது. இந்த காட்சி, நம்மில் பலருக்கே சிறுவயதில் பெற்றோரிடம் அடிவாங்கியதை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. சுற்றியிருந்த பார்வையாளர்கள் இந்த நகைச்சுவையான சம்பவத்தில் வாய்விட்டு சிரித்தனர்.

 

வீடியோவை பார்த்த வலைப்பயனர்கள், “சிம்பன்சி  மனிதர்களை விட நன்றாக பெற்றோராக நன்றாக செயல்படுகிறது எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னொரு பயனர், “அவர்கள் பணம் கட்டி நம்மைப் பார்ப்பதற்கு வந்திருக்கிறார்கள், போடா அடிக்கிறேன்!” என சிம்பான்சியின் செயலை நகைச்சுவையாக விவரித்துள்ளார். மனிதர்களுக்கே ஒழுக்கம் மற்றும் பெற்றோரின் கடமை பற்றி சிம்பான்சிகள் பாடம் கற்றுக்கொடுக்கின்றன என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது.