தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் பிரியா-தம்பதியினர் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு திருப்பூரில் தங்கியுள்ளனர். இதில் கண்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இதில் முதல் மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில் 2-வது மகன் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். அதன்படி பாலகணேஷ் (16) பிளஸ் 1 தேர்வு எழுதி இருந்த நிலையில் விடுமுறைக்காக தேனியில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக இருந்ததால் தேனியிலிருந்து திருப்பூருக்கு வருமாறு பாலகணேசை பெற்றோர் அழைத்த நிலையில் அவரும் அங்கு வந்தார்.

அப்போது பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் சிறுவன் மற்றும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் தேர்வு முடிவுகளை நினைத்து மிகவும் அச்சப்பட்டான். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் கதவை திறந்ததும் தங்கள் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாணவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.