தமிழகம் முழுவதும் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.14 கோடி பெண்கள் பயன்பெறும் நிலையில் ஜூன் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நீட்டிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் புதிய பெண்களும் பயன்பெறுவார்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் ஏறும் நிலையில் இன்று 15 ஆம் தேதி என்பதால் பெண்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை பணம் வர இருக்கிறது.

மேலும் அடுத்த மாதம் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் 90000 சிறப்பு முகாம்கள் மூலமாக மகளிர் உரிமைத் தொகைக்கு புதிய விண்ணப்பங்கள் பெறும் பணிகள் தொடங்கும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.