அண்ணாமலைக்கு நயினார் நாகேந்திரன் புகழாரம். “தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் படிப்படியாக கட்சியை உயர்த்தி வந்தனர். என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் பாஜக கோபுரத்துக்கு மேல் கலசங்கள் வைத்தவர் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் பாஜக கொடி எங்கும் பறக்க வேண்டும் என புதிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். மேலும் அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றலாக இருப்பேன். அதிமுகவில் இருந்து பாஜக வந்த உடன் எனக்கு பெரிய அளவிலான பொறுப்பு வழங்கவில்லையே என்கிற கோபம் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் மீது கூட இருந்தது. தற்போது இல்லை என கூறியுள்ளார்.