சென்னை மாவட்டம் திருநின்றவூர் நத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று விக்னேஸ்வரன் ஆர்.வி நகர் பகுதியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அவர் மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து விக்னேஸ்வரன் தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விக்னேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.