பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது அவ்வப்போது பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் பயணிகள் சென்ற ரயிலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடத்தினர்.

பின்பு பாதுகாப்புப்படையினர் அவர்களை சுட்டு வீழ்த்தி ரயிலில் இருந்த பயணிகளை மீட்டனர். இதையடுத்து  கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதையடுத்து ராணுவம் நேற்று இரவு பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் கட்லங் மலைப்பகுதியில் தலிப்பான்களை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் 2 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் சிலர் தலிப்பான் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.