
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது 6 வயது மகனுடன் ஜிம்மிற்கு சென்றுள்ளார். கிட்டத்தட்ட இரவு 11 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனால் சாலையோரம் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென தீப்பிடித்தது. அதனை அறிந்த அவர் உடனே தனது மகனை கீழே இறக்கி விட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக சிறுவனின் பேண்டில் தீ பற்றியதால் அவரது காலில் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் ஹம்ச குட்டி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சாமர்த்தியமாக செயல்பட்டு இரு சக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தார்.
கேரளா – பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு : ஸ்கூட்டரில் சாலையோரத்தில் நின்ற போது திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. நூலிழையில் தந்தையும் ஆறு வயது மகனும் உயிர் தப்பினர். #Kerala #Palakkad #Scooter #Fire #Mannarkkad #sdcworld pic.twitter.com/ROvWzOQ5aK
— SDC World (@sdcworldoffl) March 27, 2025
இது போன்ற இக்கட்டான நிலையில் தனது மகனை காப்பாற்ற தந்தை விழிப்புணர்வுடன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம் சுசுகி அக்சஸ் 125 என்பது தெரிய வந்தது.