
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகை நீலிமா. இவர் தாமரை, செல்லமே, வாணி ராணி, கோலங்கள், மெட்டிஒலி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமின்றி வெள்ளித்திரையில் பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நீலிமா தன்னுடைய வாழ்க்கையின் கடினமான நாட்கள் குறித்து சமீபத்தில் வெளிப்படையாக பேசினார். அதில், “நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து நான்கு கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முடிவு செய்தோம். அதற்காக வட்டிக்கு பணம் வாங்கி படத்தை தயாரித்தோம். ஆனால் படம் நினைத்தது போல் சரியாக வரவில்லை.
இறுதியில் அந்த படத்தை குப்பையில் தான் போட்டோம். அந்த படத்திற்காக வாங்கிய கடன் கட்ட முடியவில்லை. வாங்கிய கடனால் நடுத்தெருவில் நின்றோம். சரி இழந்தாச்சு ரோட்டுக்கு வந்தாச்சு இனி இங்கிருந்து எப்படி நகரம் போகிறோம்? என்று யோசித்தோம். அந்த சமயத்தில் தான் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினேன் .வாடகை வீட்டிற்கு கூட போக முடியாமல் என்னுடைய கணவரின் நண்பர் வீட்டில் ஒரு சிறிய அறையில் தங்கி இருந்தோம். எங்களுடைய குறிக்கோள் வெற்றி பெற வேண்டும் என்று இருந்தால் எந்த தோல்வியும் நாம் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதனால் தான் மீண்டும் அந்த இடத்தை எங்களால் பிடிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.