
இன்றைய காலகட்டத்தில் பலரும் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பணத்தை சேமிக்க தொடங்கியுள்ளனர். வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போன்றே ஆஞ்சல அலுவலகத்திலும் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு சேமிப்பு திட்டம் தொடங்கி முதிர்வு தொகை லாபத்தை வாரி வழங்கும் திட்டங்கள் வரை பல திட்டங்கள் அமலில் இருக்கிறது. இதில் வழங்கப்படும் திட்டங்களில் நல்ல லாபம் மற்றும் வட்டியும் கொடுக்கப்படுகிறது. இதில் தேசிய சேமிப்பு நேர வைப்பு திட்டம் முக்கியமான ஒன்று. ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வதன் மூலமாக இந்த திட்டத்தை தொடங்க முடியும்.
நேரம் வைப்பு திட்டத்தில் அதிகபட்சமாக முதலீடு வரம்பு கிடையாது. ஒற்றை மற்றும் கூட்டுக்கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். கூட்டுக்கணக்கில் மூன்று பெரியவர்களும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மைனர் சார்பாக ஒரு கணக்கையும் திறக்கலாம். முதலீடாளர்கள் ஒன்று இரண்டு மூன்று மற்றும் ஐந்து வருடங்களுக்கு முறை 6.9%, 7.0 சதவீதம், 7.1% மற்றும் 7.5% வட்டி விகிதத்தை பெறுவார்கள். சமீபத்திய வட்டி விகிதங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை செல்லும். இந்த திட்டத்தில் ஐந்து வருடத்திற்கு 5 லட்சத்தை முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டி விகிதத்தில் சுமார் 2,24,974 ரூபாய் வட்டி கிடைக்கும்.