பெரு நாட்டின்  லிமா நகரில், 28 வயதான ஜுவான் கார்லோஸ் டெல்லோ, மது போதையில் மயங்கிய நிலையில் ரயில் தண்டவாளத்தில் தூங்கினார். அப்போது சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இந்த சம்பவம் மார்ச் 8, 2025 அன்று நடைபெற்றது.

இந்த  சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், டெல்லோ தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். ரயில் நெருங்கும் போது, அவர் திடீரென தலை தூக்கினாலும், ரயில் அவர் மீது  மோதியது. அவர் சிறிது தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட பின்னர், தண்டவாளத்தில் இருந்து எழுந்து நின்றார்.

இந்த விபத்தில் டெல்லோ  இடது கையில் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.