
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது வித்யா பாலன் ஒரு பிரபல வங்கியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஒரு உரையாடலை வெளியிட்டுள்ளார். அதில் பணம் தான் அதிகாரம்…பொருளாதார தேவையை நிறைவேற்றுவதற்கு பணம் முக்கியமான ஒன்றாகும் என்று தொடங்கிய அவர் பெண்கள் எதற்காக பணத்தின் அருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விவரித்து கூறினார்.
அதோடு பணத்தை எப்படி சேமிப்பது, செலவு செய்வது ,முதலீடு செய்வது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு வாழ்வது உங்களுக்கு பலத்தையும் வாழ்க்கையை பயமில்லாமல் வாழ்வதற்கும் வழிவகுக்கும். என்னுடையஅப்பா திருமணம் செய்யும்போது “இனிமேல் உனது வருவாயை உனது கணவர் பார்த்துக் கொள்வார்” என்று கூறினார், அதற்கு ஏன் என்னை இதில் நம்ப மாட்டீர்கள்? என்னுடைய பணத்தை வேறொருவர் ஏன் கவனிக்க வேண்டும், இதுவரை நான் அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன், ஆனால் இப்போது நான் அதை பார்த்துக் கொள்வேன்” என்று கூறினேன்.
அன்றிலிருந்து என்னுடைய பணத்தை நானே சேமித்து வைத்தேன், அப்போது எனது பணம் வளர தொடங்கியது, அதன் பின் எனது வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் என்பது கிடைத்தது. எனவே பணம் என்பது போதுமானது என்பதை உணர்வது தான் உண்மையான அதிகாரம் என்று அவர் கூறியுள்ளார்.