தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்ற பிரதிநித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், முடிவுகள் குறித்தும் கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது தொடர்பாக வரும் 22ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா, பினராயி விஜயன், பக்வத்சிங் மான், சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் சந்திரசேகர் ராவ், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.