ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சச்சின் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையே பணம் தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சச்சின், ஹிமானி நர்வாலை கைபேசி சார்ஜிங் செய்யும் ஒயரை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது உடலை கருப்பு நிற சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நர்வாலின் தாய் சபீதா நர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நர்வாலின் மரணத்திற்கான முக்கிய காரணம் என்ன என்பதை காவல்துறையினர்  விசாரிக்க வேண்டும். அது என்னவென எங்களுக்கு தெரிய வேண்டும்.

காவல்துறையினரின் நடவடிக்கையில் எனக்கு திருப்தி கிடையாது. அந்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன். அதற்கு அரியானா அரசும் நிர்வாகமும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று அவர் கூறினார். குற்றவாளி தன்னை பாதுகாத்துக் கொள்ள புதுசு புதுசாக கூறி வருகிறார். எனது மகள் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து எனக்கு தெரிய வேண்டும். பணம் இதற்கான காரணம் கிடையாது. நர்வாலை கொலை செய்திருக்கிறார் என்றார். பின் அவர் எப்படி அவரின் நண்பராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.