அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்ட தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு அந்த மாநில அரசு சார்பில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அப்போது  பிரதமர் மோடியை வரவேற்பதற்காக 9000 பெண்கள் நடனமாடினர். பிரதமர் நரேந்திர மோடி மேடை நோக்கி வரும்போது நடன அசைவுகளுடன் பெண்கள் அவரை வரவேற்றனர். அந்தப் பெண்கள் மிகவும் அற்புதமாக நடனமாடியதை பிரதமர் மோடி கண்டுகளித்தார்.