
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளர் ஆர்பி உதயகுமார் இருந்தபோது மருத்துவர் வெங்கடேசன், ஓ.பி ரவீந்திரநாத் அல்லது ஜெய பிரதீப் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரை மாவட்ட செயலாளராக நியமிக்கலாம் என்று தெரிவித்தார். இது தொடர்பாக நான் வெங்கடேசனை சந்தித்தபோது அவர் எந்த சோபாவில் அமர்ந்திருந்தார், உதயகுமார் எந்த நிலையில் இருந்தார் என்பதை கண்கூடாக பார்த்தவன் நான். அதை கூறினால் அரசியல் நாகரீகமாக இருக்காது. ஆர்பி உதயகுமார் இனி எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா எனக்கு நற்சான்று கொடுத்தார் என்று ஓபிஎஸ் அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்து கொள்கின்றார். ஜெயலலிதா இருந்தபோது தேனி மாவட்டத்தில் இவர்தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது 2010 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு சாமானிய தொண்டன் ஆகிய உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்குவதற்கு ஜெயலலிதா. அன்றைக்கு ஜெயலலிதா இருந்தபோது மருத்துவர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள், அது என்னவென்று தயவுசெய்து சொல்லுங்கள்.
உங்கள் காலில் விழுந்து வணங்கி கேட்டுக்கொள்கின்றேன். உங்களுடன் அமர்ந்து இருந்த இடத்திலே தான் நானும் அமர்ந்திருந்தேன். இந்த உண்மையை உலகிற்கு தெரியட்டும். உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் நீங்கள் போவீர்கள் என்பதுதான் சமீப கால நடவடிக்கை ஆக உள்ளது. உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் என்ன பிரச்சனை. இப்போது பிரச்சனை நீங்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான். இன்று நீங்கள் நடத்துகின்ற இந்த செயலிலே இந்த உண்மை இருக்கிறது என்பதை அப்பாவி தொண்டர்கள் அறிய மாட்டார்கள். இந்த அப்பாவி சாமானிய ஏழை எளிய தொண்டர்களுக்கும் மக்களுக்கும் இந்த உண்மையை புரிய வேண்டும். இதை நான் சத்தியமாக தெய்வ சாட்சியாக சொல்கின்றேன் அத்தனையும் உண்மை என்று ஆர்பி உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.