மலையாளத்தில் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக மாறியுள்ளார் நடிகை சாய்பல்லவி. இவர் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் வெளிவந்த திரைப்படம் அமரன். இவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படமானது பாக்ஸ் ஆபிஸில் 140 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் தண்டேல் படம் வெளியானது.  இந்த பாடத்தில் இவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . குறிப்பாக சாய்பல்லவியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். தற்போது இவர் பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அமீர்கான் மகனோடு ஒரு படம் மற்றும் ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முதல் படத்திற்கும் தற்போது ராமாயணம் படத்திற்கும் நடிக்க சாய் பல்லவி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதல் படமான பிரேமம் படத்தில் நடிக்க 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் சாய்பல்லவி. தற்போது ராமாயணம் படத்தில் நடிப்பதற்கு ஆறு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.