தமிழகத்தில் இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு பொது விடுமுறை. இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது. ஆனால் இன்று பத்திரபதிவு அலுவலகங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் மங்களகரமான நாளில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். இதன் காரணமாக அவர்களின் நலம் கருதி இன்று செவ்வாய்க்கிழமை தைப்பூச திருநாளை முன்னிட்டு பத்திர பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அதன் பிறகு காலை 10 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆவண பதிவுகளுக்கு விடுமுறை நாள் மற்றும் ஆவண பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.