
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ஆம் தேதி தொடங்கிய நிலையில் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கிய நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, அரசியல் லாப நஷ்டங்களை பற்றி நாங்கள் கவலைப்படுவது கிடையாது. மத்திய பாஜக அரசின் ஒரே நோக்கம் ஏழைகளுக்கு சேவை செய்வது மட்டும்தான். முன்னதாக பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரையில் ஒரே ஒரு கட்சி தான் ஆட்சி செய்தது.
‘நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடிதளத்தை பத்து வருடங்களில் நாங்கள் அமைத்துள்ளோம். ஏஐ என்ற வார்த்தை மிகவும் நாகரிகமாக மாறிவிட்டது. இந்த நிலையில் இந்தியா இரட்டை AI சக்தியை கொண்டுள்ளது. முதல் ஏஐ செயற்கை நுண்ணறிவையும், இரண்டாவது ஏஐ ஆஸ்பிரேஷனல் இந்தியாவையும் குறிக்கிறது என்றார். இந்தியாவில் டபுள் ஏஐ தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் நாட்டிலே 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.