கடந்த 2021ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இந்நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்படும் 53 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மட்டும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.