
சீனாவில் உள்ள சோங்கிங் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்து அதற்காக லேப்டாப்பில் ராஜினாமா கடிதத்தை டைப் செய்துள்ளார். ஆனால் வேலையை விட்டு விட்டால் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று அந்த பெண் பின்னர் யோசித்தார்.
இதன் காரணமாக தான் டைப் செய்த ராஜினாமா கடிதத்தை அனுப்பாமல் அப்படியே வைத்துவிட்டார். ஆனால் அந்தப் பெண் வளர்த்து வந்த பூனை எதிர்பாராத விதமாக லேப்டாப்பில் என்டர் பட்டனை அழுத்திவிட்டது. இதன் காரணமாக ராஜினாமா கடிதம் அலுவலகத்திற்கு சென்றது. அந்த பெண் தன்னுடைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடந்து விவரங்களை கூறிய போதிலும் அவருக்கு மீண்டும் வேலை கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும் இதன் காரணமாக அந்த பெண் வேலையை இழந்து தவித்து வருகிறார்.