டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது மன்னிப்பும், சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட பல உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது ரத்து செய்யப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய வழங்கப்படும் எச்1-பி விசாவை நிறுத்த விரும்பவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எச்1-பி விசா தொடர்பாக நடக்கும் விவாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அவர் கூறியதாவது, இந்த விசா தொடர்பான விவாதத்தின் இரு பக்கங்களையும், நான் விரும்புகின்றேன். ஆனால் நம் நாட்டிற்குள் வரும் மிகத் திறமையான மக்களையும் நான் விரும்புகின்றேன். ஆகவே எச் 1-பி விசாவை நிறுத்த விரும்பவில்லை என்று கூறினார். மேலும் திறமையான மக்கள் நம் நாட்டிற்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அதோடு எச் 1-பி திட்டத்தை நான் நன்கு அறிவேன். இந்த திட்டத்தை பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறினார். அதோடு சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க வேண்டும் கனடா மெக்சிகோ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 % வரி பிப்ரவரி 1-ஆம் தேதி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதலாக 10% வரி விதிக்க பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.