சீனாவின் குவாண்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் பென் வேய்க்யூ. இவர் கடந்த நவம்பர் மாதம் ஒரு மைதானத்திற்கு காரில் சென்றுள்ளார். அங்கு ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் மக்கள் கூட்டத்திற்குள் தரிக்கட்டு ஓடியது. இதனால் அங்கிருந்தவர்கள் நாலாப்புரமும் சிதறி ஓட்டம் பிடித்துள்ளனர்.

இருப்பினும் இந்த விபத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பென் வேய்க்யூ-வை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். மேலும் இது தொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை கோர்ட் தற்போது நிறைவேற்றியுள்ளது.