கேரள மாநிலத்தில் சுபைதா கைகால் என்பவர் வசித்து (53) வருகிறார் . இவருக்கு ஆஷிக் (25) என்ற மகன் இருக்கிறார். இதில் சுபைதா தனக்கு 23 வயது இருக்கும்போது தன் கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அப்போது அவருடைய மகனுக்கு 2 வயதுதான். இவர் திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து தன்னுடைய மகனை தனி ஆளாக கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இதில் ஆஷிக் 12-ம் வகுப்பு முடித்த பிறகு ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார்.

அதன் பிறகு புதிய நண்பர்களின் அறிமுகத்தால் ஆஷிக் பாதை மாற ஆரம்பித்தார். தொடர்ந்து தன் தாயாரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். அதன் பிறகு போதைக்கும் அடிமையானதால் பெங்களூருவில் உள்ள ஒரு போதை அடிமை மையத்தில் சேர்க்கப்பட்டு 5 லட்சம் வரை செலவு செய்த பிறகு குணமானார். கிட்டத்தட்ட 10 மாதங்களாக சிகிச்சையில் இருந்த ஆஷிக் சமீபத்தில் தான் வீடு திரும்பினான். இவருடைய தாயாருக்கு சமீபத்தில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் தன்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி ஆஷிக் தன்னுடைய தாயிடம் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் பக்கத்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தன்னுடைய தாயாரை வெட்டி கொலை செய்தார். என்னை பெற்றதற்காக தான் அவளை கொலை செய்தேன் என்று கூறிக் கொண்டே கொடூரமாக ஆஷிக் கொலை செய்தார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தாய் மகன் இருவருக்கும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில் சொத்தை விற்று பணம் தருமாறு தன் தாயிடம் அவர் கேட்க அவர் அதற்கு மறுத்ததால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.