
கேரள மாநிலம் கொச்சி சோட்டானிக்கரையில் எருவேலி அரண்மனை உள்ளது. இதன் அருகே 12 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு ஆளில்லாத வீடு நீண்ட காலமாக பூட்டி கிடந்தது. இந்த வீட்டுக்குள் இருந்த ஒரு ஃப்ரிட்ஜில் மனித மண்டைஓடு உட்பட எலும்புக்கூடுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடு கொச்சியில் உள்ள திலீப் ஜான் என்ற ஒரு டாக்டருக்கு சொந்தமானது.
இந்த வீட்டுக்குள் சமூக விரோதிகளால் இடையூறு ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் கொடுத்த நிலையில் பின்னர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போதுதான் அந்த ஃப்ரிட்ஜில் ஒரு மண்டை ஓடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது மிகவும் பழமையானது என்று கருதப்படும் நிலையில் அதனை பிரிட்ஜுக்குள் வைத்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.