பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தை  சேர்ந்த காதலர்களை கிராம மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. கிராம மக்கள் அடித்ததால் அந்த பெண் வலியில் கதறி அழுகிறார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் சம்ஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அந்த பெண் சக்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக அடித்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.