
ஹரியானா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா. இவர் இந்திய தேசிய லோக் தள் கட்சியின் தலைவர். இவர் நான்கு முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். இவர் 7 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன். மேலும் இவருக்கு 86 வயதாகும் நிலையில் இன்று உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார்.
இவர் டெல்லி திகார் சிறையில் மூத்த கைதி என்ற வரலாற்றுக்கும் ஆளானவர். அதாவது இவர் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு முறைகேட்டில் சிக்கிய நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இவருக்கு 16 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. இதனால் ஒன்பதரை ஆண்டுகள் அவர் ஜெயிலில் இருந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெயில் இருந்து விடுதலையானார். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.