
மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண் தனது ஜீன்ஸ் பேண்ட் சரியான அளவில் இல்லை எனக் கூறி டெய்லரிடம் சென்றுள்ளார். அந்த டெய்லர் இளம் பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட்டை தைத்துக் கொடுத்தார். அதன் பிறகு அந்த ஆடையை சரி பார்ப்பதற்காக இளம்பெண் டிரையல் ரூம் சென்றார். அப்போது அந்த நபர் ட்ரையல் ரூமில் எட்டி பார்த்துள்ளார்.
இது பற்றி பக்கத்து கடைக்காரர் இளம் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். உடனே இளம்பெண் தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டெய்லரை கடைக்கு வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.