
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க இருக்கிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் மழை காரணமாக ஏற்கனவே கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில் தற்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.