
ஹரியானா மாநிலம் பிவானியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து வெடிகுண்டு ஒன்றை தயார் செய்து ஆசிரியரின் நாற்காலிக்கு அடியில் பொருத்தியுள்ளனர். அதனை வெடிக்கவும் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஆசிரியர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி தப்பியுள்ளார். இது குறித்து மாணவர்களிடம் விசாரித்த போது youtube பார்த்து வெடிகுண்டு செய்ய கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. மாணவர்களின் இத்தகைய செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.