
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். அந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்து யாஹ்யா சின்வார் தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் அரசு இவரை தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில் காசா எல்லையில் பூமிக்கு அடியில் பாதாள இடைபாடுகளில் யாஹ்யா சின்வார் (61) குறைந்த அளவு பாதுகாப்பில் இருந்தார்.
இந்த நிலையில் யாஹ்யா சின்வார் கடைசி நிமிடங்களை இஸ்ரேல் ராணுவம் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது. இஸ்ரேல் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் இணையதள பக்கத்தில் கூறியதாவது, ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார். இந்த செய்தி இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், உலகத்திற்கும் ஒரு நல்ல நாளாகும். இவ்வாறு அமெரிக்க அதிபர் பதிவிட்டு இருந்தார்.