
தமிழ் சினிமா துறையில் நட்சத்திர ஜோடியான நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவின் மகள் தியா, சமீபத்தில் ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி பரந்த அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளார். 17 வயதான தியா, மும்பையில் படித்து வருவதுடன், தன்னுடைய பெற்றோர்களைப் போலவே சினிமாவில் ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவரது இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம், திரைக்கு பின்னால் இருக்கும் பெண்களின் கதைகளை மையமாகக் கொண்டதாகும்.
‘திரிலோகா’ இன்டர்நேசனல் பிலிம்பேர் விருது நடத்திய போட்டியில் தியா, ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்திற்காக சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்தினை இயக்கியதற்காக இரண்டு விருதுகளை வென்றுள்ளார். இதன்மூலம், அவர் தன்னுடைய திறமையை ஒரு தொடக்கமாக காட்டியுள்ளார்.
தியா வெற்றியடைந்ததை அவரது பெற்றோர்ரான நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர். இதில், சூர்யா தியா இயக்கிய ஆவணப்படத்தின் உள்ளடக்கம் மற்றும் அவருக்குள் உள்ள தன்னம்பிக்கையை பெரிதும் பாராட்டினார். “திரைக்குப் பின்னால் இருக்கும் அற்புதமான பெண்களுக்கு நீங்கள் எப்படி குரல் கொடுத்தீர்கள் என்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது” என்கிறார்.
தன்னுடைய பயணத்தின் அற்புதமான தொடக்கமாக கருதுகிறேன் என்றும் தனது மகளை பாராட்டி பதிவிட்டிருந்தார்.
அதேபோல நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒளிப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி என்று தனது மகளை பாராட்டி பதிவிட்டுள்ளார்.