
தென்னிந்தியாவின் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் படப்பிடிப்பிற்கு வராமல் இருந்ததாகவும் பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் தொகையை பெற்று படங்களில் நடிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக தனுஷ் மீது புகார்கள் எழுந்துள்ளது. இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனுஷ்க்கு ரெட் கார்ட் விதித்தது.
இந்நிலையில் மெர்சல் தயாரிப்பாளர்களுடன் ஒப்புக்கொண்ட படத்தை விரைவில் முடித்து தர வேண்டும். அடுத்தாக பொல்லாதவன் பட தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்ற அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த 2 நிபந்தனைகளுடன் தனுஷ் மீதான புகார்கள் நீக்கப்பட்டு ரெட் கார்ட் தடையை முடித்துக் கொள்ள தமிழ் திரைப்பட சங்கம் முடிவு செய்துள்ளது.