நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகள் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அதேபோன்று அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தனி தனி அடையாள அட்டை வழங்கப்படும். அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு என்று புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதாவது, இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கு என்று ஆதார் அட்டை போலவே தனி அடையாள அட்டை வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அடையாள அட்டையில் நிலப்பகுதிகள் மற்றும் கால்நடைகளின் உரிமை அடங்கும். மேலும் இந்த அடையாள அட்டையை வருகிற மார்ச் மாதத்திற்குள் 5 கோடி பேருக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.