
சென்னை சேத்துப்பட்டில் கே.டி.சி.டி பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி பேசியதாவது, தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது என கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவர்னரின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, மாநில அரசின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து தேவையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களை படித்து டி.என்.பி.எஸ்.சி படிப்பவர்கள் பயன் பெறுகின்றனர். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பாட புத்தகங்களை மத்திய அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் படிக்கின்றனர்.
நூலகத்தில் ஆய்வு செய்ய சென்றிருந்தபோது அரசு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தை பாராட்டி பேசுகின்றனர். வேண்டுமானால் கவர்னர் என்னோடு எந்த நூலகத்திற்கும் வரலாம். அரசு தேர்வுக்கு தயாராக மாணவர்களை சந்தித்தால் உண்மை என்பது என்ன என்பது புரியும்.
புதிய திட்டங்களை நீங்கள் புகுத்தினால் கமிட்டி அமைத்து விசாரிப்போம். கமிட்டி அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம். மாநில பாடத்திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விடவும் மேலானது. இதனை கமிட்டி அமைத்து விசாரித்தால் கவர்னரும் புரிந்து கொள்வார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.