ஒடிசா ரெமுனா பகுதியை சேர்ந்த 42 வயதான ரபி சிங் என்பவர் கடந்த 28ஆம் தேதி தனது நண்பர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பரின் 9 வயது மகளை பார்த்தவர் தான் அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து கூட்டி வருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பி மகளை ரபி சிங்குடன் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற போலீசார் ரபி சிங்கை பிடித்து விசாரித்ததில் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரபி சிங்கை கைது செய்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெரிந்த நபர் தானே என்று நம்பி மகளை அனுப்பிய குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.