
பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கரூரை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்தார். இவர் மென்பொருளாளராக இருக்கிறார். அப்போது அந்த ரயிலில் அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், அந்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து தனிப்படை குழு அமைத்து, கிடைக்கப்பட்ட புகைப்படத்தைக் கொண்டு காவல்துறையினர் தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த நபரை பழைய மகாபலிபுரம் சாலையில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்பு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அந்த மர்ம நபர் ஈரோட்டில் இருந்து சென்னை வருவதற்காக காத்திருந்த போது ரயிலை தவறவிட்டுள்ளார்.
அடுத்து வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய போது, அந்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் கூறினார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.