
கேரளாவில் கோவளம் நகரில் கைதவிலா என்னும் பகுதியில் பிஜு- தலிமோல் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் மகன் பிஜித்குமார் எம் ஜி பொறியியல் கல்லூரியில் கணினி மின்சார பொறியியல் பிரிவில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற இவர் சக மாணவர்கள் 3 பேர் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவை சேர்ந்த மற்றொரு மாணவர் என 4 பேர் சேர்ந்து பிஜித்தை மறைவான பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் பிஜித் ஐ மது குடிக்க கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த அவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தனர். அதன் பின் அவர்கள் கல்லூரிக்கு சென்றனர். அப்போது திடீரென பிஜித்துக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இந்த செய்தியை அறிந்த கல்லூரி நிர்வாகம் 4 மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது. அத்துடன் மாணவர்களின் பெற்றோர்களை கல்லூரிக்கு அழைத்து வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற பிஜித் நடந்ததை எனது தாயார் மற்றும் தங்கையிடம் கூறினார். அதன் பின் பாத்ரூம் உள்ளே சென்று அவர் வெகு நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தாயார் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு அவர் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியான தாயார் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளம் காவல்துறையினர் பிஜித் ன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் பிஜித்தின் உடலை கல்லூரிக்கு எடுத்து சென்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதில் மாணவன் ராகிங் செய்யப்பட்டு இறந்துள்ளான். எனவே ராகிங் செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் முடிவடைந்தது. மேலும் சக மாணவர்களால் ராகிங் செய்யப்பட்ட மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.