தமிழகத்தில் மக்கள் அதிகம் வரும் இடங்களுக்கு பொதுவாக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்தான். அதனைப் போலவே கோவை ரேஸ் கோர்ஸ், வ உ சி பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பெரிய இடங்களில் காவல்துறையினர் அனைத்து இடங்களுக்கும் சென்று கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கோவை மாநகர காவல் துறை ட்ரைக் பைக் என்ற புதிய வசதி ஒன்றை தற்போது கொண்டு வந்துள்ளது. இதில் நின்றபடியே ஓட்டும் வசதி இருப்பதால் காவல்துறையினர் கூட்டம் நிறைந்த பகுதிகளில் எளிதில் ரோந்து பணியில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை காவல்துறையின் இந்த செயலை மக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.