
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இதில் சிவிக் காவலராக சஞ்சய் ராய் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவநாளன்று அவர் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெண் மருத்துவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண் மருத்துவரின் கண்கள், வாய் மற்றும் அந்தரங்கப் பகுதியில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் அவரது கால்கள் மற்றும் கைகளில் காயங்கள் இருப்பதாகவும் அறிக்கையில் வெளிவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இதில் சஞ்சய் ராய் அதிகாலையில் மருத்துவமனைக்குள் தனியாக செல்வது போன்ற காட்சிகள் இருந்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
இதில் அவர் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பின்பு தங்கியிருந்த இடத்திற்கு சென்று தூங்கி உள்ளதாகவும், பின் அவர் அணிந்திருந்த சட்டையிலிருந்த ரத்த கரையின் தடயங்களை அழிப்பதற்காக சட்டையை துவைத்ததாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரது காலணிகளில் ரத்தக்கரை இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் காவல்துறையினர் சஞ்சய் ராய்யை கைது செய்ததுடன் இச்சம்பவத்தை பற்றி அவரிடம் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.