
இந்தியாவை பொருத்தவரையில் தினந்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா இடையிலான ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதாவது பிரீமியம் தட்கலில் இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டியின் டிக்கெட் விலை 1100 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாதாரணமாக 2AC பெட்டிக்கு 2900 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் ஐந்து மடங்கு அதிகரித்து டிக்கெட் விற்கப்படுவதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர்