
மேற்குவங்க மாநிலம் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார். நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் 80 வயதாகும் இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த தகவலை அவருடைய மகன் உறுதி செய்துள்ளார்.
இவர் 2000ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.